ஆதலினால் காதல் செய்யாதீர்…

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த காதல் சீர்கேடுகள், கள்ள உறவுகள் இன்று அங்கிங்கெனாதபடி பரவலாய் எங்கும் நடக்கத் தொடங்கியுள்ளன.ஒழுக்க விழுமங்களைச் சாய்ப்பதற்கும் குடும்ப அமைப்பைக் குலைப்பதற்கும் தீய சக்திகளெல்லாம் படாதபாடு படுகின்றன. ஆனால் இதற்கு எதிரான குரலோ மிகப் பலவீனமாகவே ஒலிக்கின்றது. ‘இதைப்போய் பேசுவானேன்’ எனச் சிலர் ஒதுங்கிக் கொள்கின்றனர்.தீயவர்களின் தொடர் உழைப்பும், நல்லவர்களின் மௌனமும் இத்தீமை வெகு வேகமாகப் பரவக் காரணமாயிற்று. தீமைகள் தீயவர்களை மட்டும் தாக்காமல் அதனைத் தடுக்காமல் இருப்பவர்களையும் சேர்த்தே அழித்துவிடும். பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான காரணங்களையும் அலசி தீர்வுக்கான வழிகாட்டுதலையும் வழங்கியிருக்கிறது இந்நூல்.

ஹைர உம்மத் காலாண்டிதழ் மற்றும் சமரசம் இதழ்களில் வெளியான - சமுதாயத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பினரின் அரிய ஆக்கங்களும், நேர்காணலும், சிறுகதையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துணர வேண்டிய நூல்.

 

 

Price: INR 50.00

Loading Updating cart...